இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84 - சுரதா கவிதைகள்
பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம் எழுந்திடு புதுமை தன்னை
ஏற்றிடல் வாழ்வுக் கின்பம் - - நூல் : தேன்.மழை
துன்பங்கள் இன்பத்தின் முற்றப் புள்ளி
துடிக்கின்ற இளமையிலே நமக்குத் தோன்றும் இன்பங்கள் அனைவருமே விரும்பும் பள்ளி.
மகிழ்ச்சி
காதல் நிகழ்ச்சியோ இருவரின் மகிழ்ச்சி: திருவிழா நிகழ்ச்சியோ முழுஊர் மகிழ்ச்சி!
குடும்பம்
இரவும் பகலும் இயற்கைக் குடும்பம்: எண்ணும் எழுத்தும் இலக்கியக் குடும்பம்! பாட்டும் பரதமும் நாட்டியக் குடும்பம்:
குழந்தை குட்டிகள் கூடுத லானால் அந்தக் குடும்பமும் அவர்கள் வாழ்க்கையும் பாறையில் மோதிய படகுபோ லாகும்.