பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - சுரதா கவிதைகள்

பழந்தமிழ் கற்றல் இன்பம்

பலநாடு சுற்றல் இன்பம் எழுந்திடு புதுமை தன்னை

ஏற்றிடல் வாழ்வுக் கின்பம் - - நூல் : தேன்.மழை

துன்பங்கள் இன்பத்தின் முற்றப் புள்ளி

துடிக்கின்ற இளமையிலே நமக்குத் தோன்றும் இன்பங்கள் அனைவருமே விரும்பும் பள்ளி.

மகிழ்ச்சி

காதல் நிகழ்ச்சியோ இருவரின் மகிழ்ச்சி: திருவிழா நிகழ்ச்சியோ முழுஊர் மகிழ்ச்சி!

குடும்பம்

இரவும் பகலும் இயற்கைக் குடும்பம்: எண்ணும் எழுத்தும் இலக்கியக் குடும்பம்! பாட்டும் பரதமும் நாட்டியக் குடும்பம்:

குழந்தை குட்டிகள் கூடுத லானால் அந்தக் குடும்பமும் அவர்கள் வாழ்க்கையும் பாறையில் மோதிய படகுபோ லாகும்.