பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் - 85

தாப்

இலையை மலரைக் காய்களைக் கணிகளைத் தருவத னாலே தருவென் றழைக்கிறோம் தருவைப் போன்று தருபவள் ஆதலின் தாலாட்டும் அன்னையைத் தாயென்

றழைக்கிறோம்.

இருவென்றோ இலையென்றோ சொல்லி டாமல்

இருப்பவற்றைத் தருகின்ற காரணத்தால் தருவென்று மரத்திற்குப் பெயரிட் டார்கள்.

தருவைப்போல் தருபவளைத் தாயென் றார்கள்.

தனிமை என்பது பிரிவின் சரித்திரம் தாய்மை என்பது கருவின் சரித்திரம்

ஓரறி உயிர்களின் கருவறை பூமியாம்! ஆறறி உயிர்களின் கருவறை அன்னையாம்.

குழந்தை

தாமரையும் அல்லிகளும் தண்ணிர்ப் பூக்கள் தளிர்போன்ற குழந்தைகளே மழலைப் பூக்கள்