பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 87

தொட்டில்

பசலைக் குழந்தையின் படகுதான் தொட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் அதுதான் ஊஞ்சல்.

குடும்பநலம்

பெண்ணொன்று பெற்றபின் ஆணென்று

பெறவும், ஆணென்று பெற்றபின் அடுத்தொன்று பெறவும், அடுத்தொன்று பெற்றபின் அடிக்கடி பெறவும், ஆசைப் படுவதும் அவசரப் படுவதும், ஒப்ப முடியாத தப்பித மாகும்.

歌 密 歌

திட்டமிட்ட குடும்பந்தான் மகிழ்ச்சியோடும்

சிறப்போடும் வாழ்ந்துவர முடியும் போலிப் பட்டமிட்ட படிப்புக்கும் திட்ட மிட்டுப்

பண்படுத்தா வாழ்வுக்கும் சிறப்பே இல்லை.

- நூல்:துறைமுகம்