இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 89
சிக்கணத்தைக் கையாள வேண்டும். இன்றேல்
தேய்பிறைபோல் குடும்பநலம் தேய்ந்தே போகும்.
-இதழ்:கரதா(1.10.69)
வீடு
மருமகள் தண்ணிர் போலும்,
மாமியார் நெருப்பு போலும்,
இருந்திடில் அந்த விடே
இருள்சூழ்ந்த வீடே யாகும்.
வாழ்க்கை
போர்வாழ்க்கை என்ப தெல்லாம்
புறப்பொருள் வாழ்க்கை யாகும். சீர்வாழ்க்கை அன்பும் பண்பும் சேர்வதால் அமைவ தாகும். ஏர்வாழ்க்கை வையத் திற்கே
எடுத்துக்காட் டான வாழ்க்கை: நேர்வாழ்க்கை கோனு மாயின்
நிலம்கோனும் நெஞ்சும் கோனும்
-(போர்க்களத்தில் பாரதம்'என்னும் இாலுக்கு எழுதிய அணிந்துரை)