இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90
சுரதா கவிதைகள்
வெட்டுவது கொலையாகும்; அழகு சேர்க்க
விரும்புவது கலையாகும், அன்பும் பண்பும்
ஒட்டுவது மிகச்சிறந்த வாழ்க்கை யாகும்.
உறங்குவது சோர்வாகும்.........
✽✽✽
எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே
எண்ணுபவன் பொறுப்பற்ற மனித னாவான்.
இப்படித்தான் நாம்வாழ வேண்டு மென்றே
எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோன் ஆவான்.
–நூல் : துறைமுகம்
போர்வாழ்க்கை என்ப தெல்லாம்
புறப்பொருள் வாழ்க்கை யாகும்.
சீர்வாழ்க்கை அன்பும் பண்பும்
சேர்வதால் அமைவ தாகும்.
–இதழ் : சுரதா (1–7–68)
தைப்பனி சுடுவ தில்லை!
தமிழ்க்கவி கசப்ப தில்லை!
மெய்பொருள் காணும் வாழ்வில்
வேற்றுமை எழுவதில்லை!
✽✽✽
விதையின் வளர்ச்சியை மரத்தில் பார்
விளக்கின் வளர்ச்சியை சுடரில் பார்