இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
90 சுரதா கவிதைகள்
வெட்டுவது கொலையாகும். அழகு சேர்க்க
விரும்புவது கலையாகும். அன்பும் பண்பும் ஒட்டுவது மிகச்சிறந்த வாழ்க்கை யாகும்.
உறங்குவதுசோர்வாகும். . . . . . . .
எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே
எண்ணுபவன் பொறுப்பற்ற மனத னாவான். இப்படித்தான் நாம்வாழ வேண்டு மென்றே
எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோன் ஆவான்.
- நூல்: துறைமுகம்
போர்வாழ்க்கை என்ப தெல்லாம்
புறப்பொருள் வாழ்க்கை யாகும். சீர்வாழ்க்கை அன்பும் பண்பும் சேர்வதால் அமைவதாகும்.
- இதழ். கரதா (1.7-68)
தைப்பனி சுடுவ தில்லை!
தமிழ்க்கவி கசப்ப தில்லை!
மெய்பொருள் காணும் வாழ்வில் வேற்றுமை எழுவதில்லை!
விதையின் வளர்ச்சியை மரத்தில் பார்
விளக்கின் வளர்ச்சியை சுடரில் பார்