பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சுரதா கவிதைகள்

வெட்டுவது கொலையாகும். அழகு சேர்க்க

விரும்புவது கலையாகும். அன்பும் பண்பும் ஒட்டுவது மிகச்சிறந்த வாழ்க்கை யாகும்.

உறங்குவதுசோர்வாகும். . . . . . . .

எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே

எண்ணுபவன் பொறுப்பற்ற மனத னாவான். இப்படித்தான் நாம்வாழ வேண்டு மென்றே

எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோன் ஆவான்.

- நூல்: துறைமுகம்

போர்வாழ்க்கை என்ப தெல்லாம்

புறப்பொருள் வாழ்க்கை யாகும். சீர்வாழ்க்கை அன்பும் பண்பும் சேர்வதால் அமைவதாகும்.

- இதழ். கரதா (1.7-68)

தைப்பனி சுடுவ தில்லை!

தமிழ்க்கவி கசப்ப தில்லை!

மெய்பொருள் காணும் வாழ்வில் வேற்றுமை எழுவதில்லை!

விதையின் வளர்ச்சியை மரத்தில் பார்

விளக்கின் வளர்ச்சியை சுடரில் பார்