பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 91.

மதியின் பெருமையைப் புகழில் பார் -

வாழ்வின் பெருமையைச் சுகத்தில் பார்

-இசைப்பாடல்

ஏழ்மையும் ஏற்றத் தாழ்வும்

இன்பமும் இன்பந் தன்னை

பாழ்செய்யும் துயரும், ஒன்று

பட்டதே வாழ்க்கை யாகும்.

தலைவன்

நெற்பயிர்க்கு உழவன்தான் தலைவன்: நாட்டின்

நெருக்கடிக்குத் தீயவனே தலைவன்: விண்ணில் அற்புதங்கள் செய்வதற்கு விஞ்ஞா னத்தை

அறிந்தோனே சரியான தலைவ னாவான்.

容 :

கற்பனைக்குக் கவிஞன்தான் தலைவன் காணும்

கனவுக்குக் கண்னேதான் தலைவன்: ஒன்றை

விற்பதற்கு வணிகன்தான் தலைவன் நாட்டின்

விடுதலைக்குத் துயவனே தலைவன்.

ஏடாள வேண்டியவன் புலவன்: யாழில்

இசைமீட்ட வேண்டியவன் பரிசில் வாணன். வீடாள வேண்டியவள் மனைவி; நல்ல

- நூல் துறைமுகம்