இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96 சுரதா கவிதைகள்
பசி
உறக்கம் வந்தால் மனம் ஒயும்.
உணவு கிடைத்தால் பசிஒயும்.
寝 *
சந்தங்கள் யாவும், பாட்டுத்
தமிழ்த்தோழி யாகும். செந்திப் பந்தங்கள் யாவும், எண்ணெய்ப்
பசிகொண்ட வெளிச்ச மாகும்
பழிவந்தால் பயப்படுவர் மேலோர்; வாட்டும்
பசிவந்தால் பயப்படுவர் தாழ்ந்த மக்கள்.
- நூல்: தேன்.மழை
கோபம்
கள்ளத்தால் சிலரழிவர்; ஏழை மக்கள்
கண்ணிரால் சிலரழிவர் பொறாமை என்னும் உள்ளத்தால் சிலரழிவர்: கோப மென்னும்
உணர்ச்சியினால் சிலரழிவர்;...... 独 就 3:
ஆற்றினது கோபத்தை வெள்ள மென்பர்
அரசனது கோபத்தை வீர மென்பர்
காற்றினது கோபத்தைப் புயலென் பார்கள் கடலினது கோபத்தை ஊழி என்பர்.