இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
சுரதா கவிதைகள்
சென்றொரு நாட்டினை வென்று கொணர்ந்திடும்
செல்வமும் கண்ணீரே
திட்டுவ தும்தலை வெட்டுவ தும்சிலர்
செய்கையும் கண்ணீரே.
–நூல் : துறைமுகம்
தன்பொருள் தன்சுக மேபெரி தாமெனும்
தத்துவம் கண்ணீரே.
தாய்மொழி மீதபி மானமும் ஞானமும்
தாழ்ந்திடின் கண்ணீரே.
–நூல் : துறைமுகம்
மனத்துயர் எல்லாம் கண்ணீர்
மழைக்கொரு பருவ மன்றோ?
✽✽✽
கசிந்து வருவது கண்ணீர்; அந்நீர்
உப்புக் காய்ச்ச உதவாத் தண்ணீர்.
✽✽✽
கடல்நீரும் காவிரியும் வெள்ளங் காட்டும்.
கண்ணீரே கலங்கிடுவோர் உள்ளங் காட்டும்.
✽✽✽
காதலிலே தோல்வியுற்றார் கண்ணீர் சொந்தக்
காரணத்தில் வெளியீடே யாகும். நோயின்
வேதனையால் அழுபவரின் கண்ணீர் “துன்பம்
விலகாதோ” எனக்கேள்வி கேட்கும் கண்ணீர்.