இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 101
சோதனையே வந்தாலும் நாட்டுக் காகத்
துன்பத்தை வரவேற்போன் வடிக்கும் கண்ணிர் மேதினியே பாராட்டும் கண்ணி ராகும்!
விளம்பரக்கண் ணிர்விரைவில் வற்றிப் போகும்: . . . . -நூல்: தேன்.மழை
காற்றின் முதுமை புயலாகும்
காயின் முதுமை கணியாகும் நாற்றின் முதுமை கதிராகும்
நட்பின் முதுமை அன்பாகும்
- 孕
ஒய்ந்தவர் முதுமை யெல்லாம் உறக்கமாம்; கருமை பெற்ற கூந்தலின் முதுமை யெல்லாம்
கொக்குவெண் நுரையாம்; செல்வம் தேய்ந்தவர் முதுமை யெல்லாம்
தீராத வறுமை யாகும். மாந்தரின் முதுமை யெல்லாம்
மரணத்தின் இளமை யாகும்.
- நூல்:துறைமுகம்