பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 10s சந்தனத்தில் குளிர்கண்டேன்; வெப்பங் கண்டேன்.

சருகுதனில் ஈரத்தின் வறுமை கண்டேன்.

-இதழ்.போர்வாள் (163-1957)

ஆலைதனில் செங்கரும்பின் துயரங் கண்டேன்

ஆற்றோரம் கிளிப்பச்சை மரங்கள் கண்டேன் ஒலைதனில் கருள்கண்டேன்; ஏழை மக்கள்

உள்ளத்தை அவ்வோலைச் சுருளில் கண்டேன்.

-இதழ்:போர்வாள் (163-1957)

கற்றவர்தம் இதயத்தில் நூல்நிலையம் கண்டேன் கண்ணிரில் ஏழைகளின் ஏக்கத்தைக் கண்டேன்.

தன்னைப்பற்றி

சொந்த அறி வோடெதையும் புதுமை யாகச்

சொல்வதுதான் என்வழக்கம் திருட மாட்டேன். செந்தமிழின் ஆண்வடிவம் என்று என்னைச்

செறுக்கோடு நான்சொல்லிக் கொள்ளு கின்றேன்.

麥 擎 毒

முதன்முதலில் தாய்ப்பாலின் இனிமை கண்டேன்;

முதிர்நிலவே! அதனால்தான் வளர்ச்சி பெற்றேன்.

அதற்குப்பின் செந்தமிழின் இனிமை கண்டேன்;

அதனாலே தமிழ்நாட்டில் கவிஞன் ஆனேன்.