சுரதா கவிதைகள்
105
சந்தனத்தில் குளிர்கண்டேன்; வெப்பங் கண்டேன்.
சருகுதனில் ஈரத்தின் வறுமை கண்டேன்.
–இதழ் : போர்வாள் (16–3–1957)
ஆலைதனில் செங்கரும்பின் துயரங் கண்டேன்
ஆற்றோரம் கிளிப்பச்சை மரங்கள் கண்டேன்
ஓலைதனில் சுருள்கண்டேன்; ஏழை மக்கள்
உள்ளத்தை அவ்வோலைச் சுருளில் கண்டேன்.
–இதழ் : போர்வாள் (16–3–1957)
கற்றவர்தம் இதயத்தில் நூல்நிலையம் கண்டேன்
கண்ணீரில் ஏழைகளின் ஏக்கத்தைக் கண்டேன்.
சொந்தஅறி வோடெதையும் புதுமை யாகச்
சொல்வதுதான் என்வழக்கம்; திருட மாட்டேன்.
செந்தமிழின் ஆண்வடிவம் என்று என்னைச்
செறுக்கோடு நான்சொல்லிக் கொள்ளு கின்றேன்.
✽✽✽
முதன்முதலில் தாய்ப்பாலின் இனிமை கண்டேன்;
முதிர்நிலவே! அதனால்நான் வளர்ச்சி பெற்றேன்.
அதற்குப்பின் செந்தமிழின் இனிமை கண்டேன்;
அதனாலே தமிழ்நாட்டில் கவிஞன் ஆனேன்.