இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 சுரதா கவிதைகள்
புகழ்வெறி எனக்குப் புள்ளி யளவும் இல்லை! சராசரிப் பொறாமையும் இல்லை! நானொரு கவிஞன்! அதைவிட - நானொரு நல்லவன் இந்த நாட்டிலே!
எண்ணங்கள் தருபவனே சிறந்தோன்; கோழை
எனப்படுவோன் நூறுமுறை இறந்தோன்.
வாழ்வில் கண்எனக்கு எதுவென்றால், தமிழ்தான்! நல்ல
கவிதைகளே என்மூச்சு,..............
அறிந்தேன்
பணப்பெருமை மீன்கிழிக்கும் நீர்க்கோடென் றறிந்தேன் பாரினிலே புகழொன்றே நிலைத்திடுமென் றறிந்தேன்
-இதழ். சுரதா(13-1968)
வென்றவரும் சிலசமயம் தோற்பரென்பதறிந்தேன்; வெறும்பேச்சில் யாதொன்றும் விளையாதென்
றறிந்தேன்; டொன்னெல்லாம் மண்வயிற்றின் கருவென்ப
தறிந்தேன்; புகழெல்லாம் அறிவினலங் காரமென்ப தறிந்தேன்.
- நூல்: துறைமுகம்