பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சுரதா கவிதைகள்

புகழ்வெறி எனக்குப் புள்ளி யளவும் இல்லை! சராசரிப் பொறாமையும் இல்லை! நானொரு கவிஞன்! அதைவிட - நானொரு நல்லவன் இந்த நாட்டிலே!

எண்ணங்கள் தருபவனே சிறந்தோன்; கோழை

எனப்படுவோன் நூறுமுறை இறந்தோன்.

வாழ்வில் கண்எனக்கு எதுவென்றால், தமிழ்தான்! நல்ல

கவிதைகளே என்மூச்சு,..............

அறிந்தேன்

பணப்பெருமை மீன்கிழிக்கும் நீர்க்கோடென் றறிந்தேன் பாரினிலே புகழொன்றே நிலைத்திடுமென் றறிந்தேன்

-இதழ். சுரதா(13-1968)

வென்றவரும் சிலசமயம் தோற்பரென்பதறிந்தேன்; வெறும்பேச்சில் யாதொன்றும் விளையாதென்

றறிந்தேன்; டொன்னெல்லாம் மண்வயிற்றின் கருவென்ப

தறிந்தேன்; புகழெல்லாம் அறிவினலங் காரமென்ப தறிந்தேன்.

- நூல்: துறைமுகம்