பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - சுரதா கவிதைகள் அன்புக்குத் தலைமை தாங்கும் மனிதன் பிறர் அடித்தாலும் அணைப்பான். கண்ணிரைத் துடைப்பான்.

- சுரதா

காதல் என்பது முதலில் மனமும் பிறகு உடலும் செய்யும் நடவடிக்கை

- சுரதா

நம்பிக்கைக்கு மதிப்பு தந்தால் ஆராய்ச்சிக்கு அங்கு வேலையே இல்லை.

- சுரதா

உவமை என்பது கற்பனையில் பிறப்பதல்ல, நடைமுறையில் ஒத்து இருக்கும்ஒன்றோ டொன்றைத் தொடர்பு படுத்திக் காட்டுவதே சங்க கால இலக்கியத்தில் இருக்கும் உவமை அழுத்தத்தின் மரபு இடைக்காலத்தில் கைவிடப்பட்டது. அதன் காரணமாகவே கற்பனை வளர்ந்தது.

- சுரதா

எவன் அதிக ஆச்சரியப்படுவதை

நிறுத்திக் கொள்கிறானோ அவன் சீக்கிரத்தில் புத்திசாலியாகி விடுகிறான்.

- - சுரதா