பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள் 1


                 இயற்கை
      கோடைவெயில் வந்ததனால் குயில்கள் கூவும்
        கொம்பெங்கும் தளிர்தொங்கும் வண்ணம் மேவும்
      ஏடுதரும் பைத்தமிழைக் கிளிகள் கற்கும்.
         இலைக்குடையைப் பிடித்தபடி மரங்கள் நிற்கும்.
         
     "ஆறெல்லாம் போர்த்துவது பூவின் போர்வை:
      அழகுமலர் வழிப்பதெல்லாம். செந்தேன் வேர்வை:
      சேறெல்லாம் பயிருண்ணும் கறுப்புச் சோறு.
                                -இதழ்:கரதா (1.6.1968)
                        இறைவன்
           ஆதியில் வாழ்ந்தோர்க் கெல்லாம் 
             அச்சமே இறைவ னானான்.
           ஒதிய மேலோர்க் கெல்லாம்
             உண்மையே இறைவ னானான். 
           பாதியில், நாட்டை யாண்ட
             பார்த்திபன் இறைவ னானான். 
           மேதினி மீதில் இன்றோ
          விஞ்ஞானி இறைவ னானான்.

. -நூல் : துறைமுகம்