இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
1
இயற்கை
கோடைவெயில் வந்ததனால் குயில்கள் கூவும்
கொம்பெங்கும் தளிர்தொங்கும் வண்ணம் மேவும்
ஏடுதரும் பைத்தமிழைக் கிளிகள் கற்கும்.
இலைக்குடையைப் பிடித்தபடி மரங்கள் நிற்கும்.
✽✽✽
ஆறெல்லாம் போர்த்துவது பூவின் போர்வை;
அழகுமலர் வழிப்பதெல்லாம் செந்தேன் வேர்வை;
சேறெல்லாம் பயிருண்ணும் கறுப்புச் சோறு.
–இதழ் : சுரதா (1–6–1968)
இறைவன்
ஆதியில் வாழ்ந்தோர்க் கெல்லாம்
அச்சமே இறைவ னானான்.
ஓதிய மேலோர்க் கெல்லாம்
உண்மையே இறைவ னானான்.
பாதியில், நாட்டை யாண்ட
பார்த்திபன் இறைவ னானான்.
மேதினி மீதில் இந்தோ
விஞ்ஞானி இறைவ னானான்.
–நூல் : துறைமுகம்