இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள் 1
இயற்கை
கோடைவெயில் வந்ததனால் குயில்கள் கூவும்
கொம்பெங்கும் தளிர்தொங்கும் வண்ணம் மேவும்
ஏடுதரும் பைத்தமிழைக் கிளிகள் கற்கும்.
இலைக்குடையைப் பிடித்தபடி மரங்கள் நிற்கும்.
"ஆறெல்லாம் போர்த்துவது பூவின் போர்வை: அழகுமலர் வழிப்பதெல்லாம். செந்தேன் வேர்வை: சேறெல்லாம் பயிருண்ணும் கறுப்புச் சோறு.
-இதழ்:கரதா (1.6.1968)
இறைவன்
ஆதியில் வாழ்ந்தோர்க் கெல்லாம் அச்சமே இறைவ னானான். ஒதிய மேலோர்க் கெல்லாம் உண்மையே இறைவ னானான். பாதியில், நாட்டை யாண்ட பார்த்திபன் இறைவ னானான். மேதினி மீதில் இன்றோ விஞ்ஞானி இறைவ னானான்.
. -நூல் : துறைமுகம்