இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சுரதா கவிதைகள்
7
முகில்
அலைகளை அடுக்கி வைத்து
அனுப்புதல் போல, வானில்
கலையாத நடைபி ரிக்கும்
ஈரத்தின் பரப்பே!....
மழை
எண்ணெயில் குளித்த கூந்தல்
இழையென நீண்டு பெய்யும்
வெண்மழை நீரே! விண்ணின்
வியர்வையே வாழ்க!.
***
வீணையின் நரம்புபோல் வீழும் மழைநீர்
தாவரங் கட்கெல்லாம் தாய்ப்பா லாகும்!
***
மேகத்தின் சிரிப்பை மின்னலாம்! அந்த
மேசும் வழிக்கும் வியர்வையே மழையாம்!
புல்லுக்கும் பூண்டுக்கும் மழையே புணர்ச்சிநீர்!
எள்ளுக்கும் கொள்ளுக்கும் அதுவே வளர்ச்சிநீர்!