இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
சுரதா கவிதைகள்
நீர்
உப்புநீர்க் கடலில் உருவாகும் மேகம்
துப்பும் எச்சிலே தூயவெண் மழையாம்!
வீணையின் நரம்புபோல் வீழும் மழைநீர்,
தாவரங் கட்கெல்லாம் தாய்ப்பா லாகும்!
✽✽✽
ஏரியென்றும் ஆறென்றும் இருண்ட கடலென்றும்
குளங்குட்டை என்றும் கூறும் இவையாவும்
ஐந்து வகைப்பட்ட அழகான நீர்க்குடும்பம்!
வாலிபத்தின் அவசரந்தான் காதல் என்றான்.
வானத்தின் அறுவடைதான் மழைநீர் என்றாள்.
–இதழ் : உரிமை வேட்கை
(1974–பொங்கல் மலர்)
கண்ணீரின் மீது செல்லும்
கப்பல்தான் கவலை. ஆற்றுத்
தண்ணீரின் மீது செல்லும்
தட்டுதான் ஓட மாகும்.
–இதழ் : உரிமை வேட்கை
(1975–பொங்கல் மலர்)
வற்றாத மேசும் வாயைத் திறந்தால்
ஊசிபோல் மின்னல் உடனே தோன்றும்.