பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 9

விம்மி விம்மி மேகங்கள் அழுதால் நல்ல மழைநீர் நமக்கெல்லாம் கிடைக்கும்

           நூல் : சுவரும் சுண்ணாம்பும்

நதி

பொன்னியே, என்று நீ பிறந்த தேதி-உதிரம் போலவே உனக்கும் இல்லையே சாதி உன்னுடல் தனைமறைக்கத் தண்ணிர்தான்

                            துணியோ? 

உருண்டோடும் கூழாங்கல், உன்மாலையின்

                             மணியோ?                         - (இசைப்பாடல்)

காவிரி

மரமும் பயிரினமும் பருகிடும் பாலே - குடகு மலைமீதிருந்து மேகம் நீட்டிய காலே! விரிந்து புகழ் அடைந்தாய் மூவேந்தரைப் போல, விளைவும், செல்வமும், தென்னாட்டில்

                          உன்னாலே.
                       - (இசைப்பாடல்)