இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாகவிதைகள் 9
விம்மி விம்மி மேகங்கள் அழுதால் நல்ல மழைநீர் நமக்கெல்லாம் கிடைக்கும்
நூல் : சுவரும் சுண்ணாம்பும்
நதி
பொன்னியே, என்று நீ பிறந்த தேதி-உதிரம் போலவே உனக்கும் இல்லையே சாதி உன்னுடல் தனைமறைக்கத் தண்ணிர்தான்
துணியோ?
உருண்டோடும் கூழாங்கல், உன்மாலையின்
மணியோ? - (இசைப்பாடல்)
காவிரி
மரமும் பயிரினமும் பருகிடும் பாலே - குடகு மலைமீதிருந்து மேகம் நீட்டிய காலே! விரிந்து புகழ் அடைந்தாய் மூவேந்தரைப் போல, விளைவும், செல்வமும், தென்னாட்டில்
உன்னாலே. - (இசைப்பாடல்)