இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
:- 10 சுரதாகவிதைகள்
ஏர்
ஈரத்தின் வரலாறே மேக மாகும். ஏருழவின் வரலாறே வைய மாகும்.
- நூல் தேன்.மழை
கடல்
விண்வெளி இவ்வை யத்தின்
விரிகுடை புவியில் வாழும்
பெண்களின் கண்கள் இட்ட
பிச்சையே கடலின் நீலம்! - நூல் : தேன் மழை
கள்ளுண்ட சிற்றினத்தார் நடையைப் போலே
கருங்கடலின் மீதலைகள்: சங்கத் தாரால் தள்ளுண்ட பாடலைப்போல் துரைகள், வண்ண சமுத்திரத்தின் ஒரத்தில் சிறுவெண் காக்கை -போபால் தமிழ்ச்சங்கம் சிறப்பு மலர் (1966-67)
அலைவளர் கடலே ஆழம் அலைகளே அதன்கைத் தாளம்
-நூல் : தேன்.மழை