பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:- 10 சுரதாகவிதைகள்

                ஏர்

ஈரத்தின் வரலாறே மேக மாகும். ஏருழவின் வரலாறே வைய மாகும்.

              - நூல் தேன்.மழை
               கடல்

விண்வெளி இவ்வை யத்தின்

விரிகுடை புவியில் வாழும் 

பெண்களின் கண்கள் இட்ட

பிச்சையே கடலின் நீலம்!
             - நூல் : தேன் மழை

கள்ளுண்ட சிற்றினத்தார் நடையைப் போலே

கருங்கடலின் மீதலைகள்: சங்கத் தாரால் தள்ளுண்ட பாடலைப்போல் துரைகள், வண்ண
சமுத்திரத்தின் ஒரத்தில் சிறுவெண் காக்கை
      -போபால் தமிழ்ச்சங்கம் சிறப்பு மலர்                                (1966-67)

அலைவளர் கடலே ஆழம் அலைகளே அதன்கைத் தாளம்

             -நூல் : தேன்.மழை