இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
சுரதா கவிதைகள்
கரையொடு பிறவாக் கருங்கடல், பூத்த
நரையொடு பிறந்த நதிபதி யாகும்!
✽✽✽
நீல வானத்தின் நிலைக்கண் ணாடிதான்
கத்திக் கொண்டிருக்கும் கருங்கட லாகும்.
✽✽✽
பள்ளத்தில் துள்ளு கின்ற
பனிக்கடல் பாராய்? தீயோர்
உள்ளத்தின் இருட்டும் இந்த
ஒலிகடல் இருட்டும் ஒன்றே!
–இதழ் : இலக்கியம்
(15–3–1961)
ஆடிக்கொண் டேயி ருக்கும்
அழகனா தொட்டில்! கத்திப்
பாடிக்கொண் டேயி ருக்கும்
பாடகன்! பூமிப் பெண்ணைக்
கூடிக்கொண் டேயி ருக்கும்
கொக்கோகக் கிழவன் உப்பின்
வீடிது! மகர மீன்கள்
விளையாடும் தண்ணீர் வீதி!
–இதழ் : இலக்கியம்
(15–3–1961)