இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
13
காடு
காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
குளிர்ந்த நிழல்கொடுக்கும்
–நூல் : தேன்மழை
ரோஜாப்பூ
பல்லொடு பிறப்பது நாகப் பாம்பு
முள்ளொடு பிறப்பது முழுரோ ஜாப்பூ!
வண்டொடு தூங்கும் மலராம் அதற்குப்
புதுப்பச் சிலைகளே புடவையாம்! மற்றதன்
அடியி லிருக்கும் முட்களே ஆணியாம்
தேன்
பொங்கி வழிந்திடும்தேன் – அது
பூக்களின் வியர்வையடி
–நூல் : தேன்மழை