இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
சுரதா கவிதைகள்
வெட்டாத பள்ளத்தில் படுத்துக் கொண்டே
விம்முகின்ற கருங்கடல்தான் ஆழ மாகும்.
கொட்டாவி விடுகின்ற புதிய பூவின்
குழிக்குள்ளே தூங்கும்தேன் சிறந்த தாகும்.
–இதழ் : தென்னகம் (1–6–1971)
கனி
மதுரசக் கனியெலாம் மரத்தின் கொப்புளம்
–இதழ் : சுரதா (1–7–68)
மீன்
கொல்லக் கொல்லக் குறையாத சேனையோ
அக்கடல் மீதெழும் அலைகளே யாகும்!
கொள்ளக் கொள்ளக் குறையாச் செல்வமோ
விரிகடல் வளர்க்கும் மீன்களே யாகும்.
முகம்
முகத்திற்கு முகவுரை முதிரா நெற்றியே
தலைக்கு முகவுரை தாமரை முகமே
–நூல் : தேன்மழை