பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சுரதாகவிதைகள் வெட்டாத பள்ளத்தில் படுத்துக் கொண்டே விம்முகின்ற கருங்கடல்தான் ஆழ மாகும். கொட்டாவி விடுகின்ற புதிய பூவின்

குழிக்குள்ளே தூங்கும்தேன் சிறந்த தாகும்.

-இதழ்: தென்னகம் (1.6.1971)

கணி

" மதுரசக் கணியெலாம் மரத்தின் கொப்புளம்

-இதழ் : சுரதா (1-7-68)

Dಾಷ...]

கொல்லக் கொல்லக் குறையாத சேனையோ அக்கடல் மீதெழும் அலைகளே யாகும்! கொள்ளக் கொள்ளக் குறையாச் செல்வமோ விரிகடல் வளர்க்கும் மின்களே யாகும்.

முகம

முகத்திற்கு முகவுரை முதிரா நெற்றியே தலைக்கு முகவுரை தாமரை முகமே

- துரல்: தேன் மழை