இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
17
பற்கள்
நிறைந்தநாள் நிலவே! கேளாய்
நின்அங்கம் கட்டித் தங்கம்
குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே!...............
✽✽✽
சொந்தங்கள் உறவில் தோன்றும்
தொடர்கதை யாகும். யானைத்
தந்தங்கள் பெருமை தேடித்
தருகின்ற பற்க ளாகும்.
உதடு
அணங்கின் வாயிதழ், அடிக்கடி திறக்கும்
பதினாறு அரும்புப் பற்களின் நெருக்கம்
பவளப் பெட்டியில் வைத்தமுத் துச்சரம்
–நூல் : படத்தரசி
முத்தைப்போல் இருக்கின்ற பற்கள் தம்மை
மூடிவரும் பழக்கதவே! சிவந்த வாயே!
சத்துள்ள முத்தமிழின் நுட்பந் தன்னைத்
தரணியிலே பறைசாற்று............
–இதழ் : முரசொலி (28–3–1955)