பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஈரதாகவிதைகள்

எப்போதும் உன்வாய் செவ்வாய் எனக்குநீ என்றும் திங்கள் இப்போதுன் சிரிப்பு வெள்ளி இன்பந்தான் நமது பள்ளி.

- நால்:துறைமுகம்.

மச்சம்

இறவாத புகழே சிறந்த எச்சமாம். தானே தோன்றும் தழும்பே மச்சமாம்.

- துரல்: கவரும் சுண்ணாம்பும்.

இரத்தம்

முத்தும் பவளமும், உப்பும் சங்கும் கடல்படு பொருளாம்; கனிந்த ரத்தமோ உடல்படு பொருளாம்; உணவின் சாரமாம்!

兼 窥 事 ரத்தமும் சிவந்த ரத்தத் துளிகளும் நரம்புக் குழாய்களில் ஒடும் நதிகளாம்.

ரத்தினம் கடையிலே ரத்தம் உடம்பிலே போருக்கும் ரத்தம்: புரட்சிக்கும் ரத்தம் தந்தனர் என்பதே சரித்திரச் சத்தம்!