இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
19
கருப்பை
விவாகம் ஆகும் வரையிலது வெறும்பை
வெள்ளை வியர்வை விழுங்கினால் கருப்பை.
✽✽✽
காதலர் கூடி உறவாடும்
கட்டில் அறையே கழிவறையாம்
நாதமும் விந்தும் கலக்கின்ற
நல்ல அறையே கருவறையாம்.
✽✽✽
பெண்ணெனப் படுபவள் பேதை, பெதும்பை
அவளுடற் குள்ளே அமைந்த கருப்பை
தையற் காரன் தைக்காத சிறுபை
பெண்
அரும்பு சடங்கானால் அப்போது மலராம்
அழகி சடங்கானால் அப்போது மங்கையாம்.
✽✽✽
மண்மீது குவிக்கும் மணல்மேடும் சரியும்.
பருவ மங்கையர் பால்மேடும் சரியும்.
✽✽✽