இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாகவிதைகள் 21
நிலத்திற் கழகு நெல்லாம் கரும்பாம் தடாகத்திற் கழகு தாமரைப் பூவாம் நெஞ்சத்திற் கழகு நல்ல நினைவுகள் மஞ்சத்திற் கழகு மாதே நீதான்.
- நூல்: தேன்.மழை
வன்பால் குறிஞ்சிநிலம் -அது வாழ்க்கைப் புணர்ச்சி நிலம்! மென்பால் மருதநிலம் - அதை வெல்வதுன் மேனி நலம்!
-இதழ்: சுரதா (1.5-1968)
பிறைநிலவின் மொழி பெயர்ப்பே யானைத் தந்தம்; பெற்றோரின் மொழிபெயர்ப்பே குழந்தை யாகும்; வறுமையதன் மொழிபெயர்ப்பே ஏழை மக்கள்: வானத்தின் மொழிபெயர்ப்பே பெண்ணின் பார்வை
- நூல்:துறைமுகம்.
பருவம் என்பது காலத்தின் பக்குவம் பெண்ணுக் கமைந்திடும் பேதைப் பருவமோ, நிமிர்ந்து வளரும் நெற்பயிர் போன்றது. மனமாலைக் குரிய மங்கைப் பருவமோ, நிதானமாய்க் குனியும் நெற்கதிர் போன்றது.
- நூல்: கவரும் சுண்ணாம்பும்