பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 . சுரதாகவிதைகள்

பெண்ணுரிமை

பெண்ணுரிமை பெறவேண்டும் விதவை யான

பெண்ணுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்

எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்.

- ஆடை –

விண்ணுக்கு மேலாடை மேகம்; வீர

வேலுக்கு மேலாடை பகைவர் ரத்தம்: கண்டால் நான் விடமாட்டேன் என்று கூறும் கயவர்க்கோ காமந்தான் ஆடை யாகும்.

- இதழ்: தென்றல் (22-9-1962)

மண்ணுக்கு மேலாடை நதிகள்: காதல்

மங்கைக்கு மேலாடை கணவன்: ஈரப் புண்ணுக்கு மேலாடை வெள்ளைப் பஞ்சு:

பூக்களுக்கு மேலாடை செந்தேன் ஈக்கள்.

- -இதழ்.தென்றல் (22-9-1952)