இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22 . சுரதாகவிதைகள்
பெண்ணுரிமை
பெண்ணுரிமை பெறவேண்டும் விதவை யான
பெண்ணுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்
எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்.
- ஆடை –
விண்ணுக்கு மேலாடை மேகம்; வீர
வேலுக்கு மேலாடை பகைவர் ரத்தம்: கண்டால் நான் விடமாட்டேன் என்று கூறும் கயவர்க்கோ காமந்தான் ஆடை யாகும்.
- இதழ்: தென்றல் (22-9-1962)
மண்ணுக்கு மேலாடை நதிகள்: காதல்
மங்கைக்கு மேலாடை கணவன்: ஈரப் புண்ணுக்கு மேலாடை வெள்ளைப் பஞ்சு:
பூக்களுக்கு மேலாடை செந்தேன் ஈக்கள்.
- -இதழ்.தென்றல் (22-9-1952)