உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சுரதா கவிதைகள்



பெண்ணுரிமை

பெண்ணுரிமை பெறவேண்டும் விதவை யான
        பெண்ணுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்
        எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்.


ஆடை

விண்ணுக்கு மேலாடை மேகம்; வீர
        வேலுக்கு மேலாடை பகைவர் ரத்தம்;
கண்டால்நான் விடமாட்டேன் என்று கூறும்
        கயவர்க்கோ காமந்தான் ஆடை யாகும்.

–இதழ் : தென்றல் (22–9–1962)

மண்ணுக்கு மேலாடை நதிகள்; காதல்
        மங்கைக்கு மேலாடை கணவன்; ஈரப்
புண்ணுக்கு மேலாடை வெள்ளைப் பஞ்சு;
        பூக்களுக்கு மேலாடை செந்தேன் ஈக்கள்.

–இதழ் : தென்றல் (22–9–1952)