பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

பக்திப் பாடல்களை மட்டுமே எழுதுகிற கவிஞர்கள் உண்டு. தத்துவப் பாடல்களை மட்டுமே எழுதுகிற கவிஞர்கள் உண்டு. காதல் பாடல்களை மட்டுமே தீட்டுகிற கவிஞ்ர்கள் உண்டு. இப்படி ஆளுக்கு ஒரு துறையை மட்டுமே பிடித்துக் கொண்டு செல்கிற இந்தக் காலகட்டத்தில், ஒரு கவிஞன் எல்லாத் துறையிலும். எல்லாப் பொருட்களிலும் கவிதை எழுதியிருக்கிறார் என்றால் அது போற்றுதலுக்குரியது.

வாழ்வியலின் பல்வேறு பொருட்களில் கவிஞர் சுரதா அவர்கள் தீட்டிய கவிதைகளில் இருந்தே இந்த கருத்து முத்துக்கள் தொகுக்கப் பட்டுள்ளது. -

இயற்கையில். இருந்து இடுகாடு:வரையில் நூற்று ஜம்பதுக்கும் மேற்பட்ட பொருள்களில் அவர் வடித்திருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றுமே மிகமிகச் சிறப்பானவை.

நூலின் அளவு கையடக்கமாக இருந்தாலும் இதிலுள்ள கவிதைகளுக்குள் உலகமே அடங்கியிருக்கிறது.