உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

29



முக்கோணத் தமிழ்நாடு முல்லைக் காடு;
        மூத்தநிலம்; இந்நாடு நெல்லின் வீடு.

–இதழ் : தமிழ்நாடு (14–1–1962)
–(பொங்கல் மலர்)



மாந்தரெலாம் உணவினிலே இன்பம் காண்பர்
        மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான்
தீந்தமிழ்போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை.
        திருத்தங்கள் இல்லாத நாடே இல்லை.

–இதழ் : ‘தமிழ்நாடு’ (14–1–1965)

வாய்க்காலின் தண்ணீரைத் தொட்டுத் தூங்கும்
        வயல்தனிலே ஏருழுவின் செய்தி யுண்டு.
தாய்பாலில் குடும்பத்தின் கதையும், நாட்டின்
        சரித்திரமும் சந்தித்துக் கொண்டி ருக்கும்.

–நூல் : தேன்மழை

வரம்பு

அலைவரம்பு மீறிவிடின்
        நெய்தல்நிலப் பகுதியெலாம் அழிந்து போகும்.
கலைவரம்பு மீறிவிடின்
        சமுதாயச் சிந்தனைகள் கருகிப் போகும்.