இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாகவிதைகள் 29
முக்கோணத் தமிழ்நாடு முல்லைக் காடு;
மூத்தநிலம்; இந்நாடு நெல்லின் விடு.
-இதழ். தமிழ்நாடு (14.1-1963)
- (பொங்கல்மலர்)
மாந்தரெலாம் உணவினிலே இன்பம் காண்பர் மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான் தீந்தமிழ்போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை.
திருத்தங்கள் இல்லாத நாடே இல்லை.
-இதழ். தமிழ்நாடு (14.7.1955)
வாய்க்காலின் தண்ணிரைத் தொட்டுத் துங்கும்
வயல்தனிலே ஏருழுவின் செய்தி யுண்டு. தாய்பாலில் குடும்பத்தின் கதையும், நாட்டின்
சரித்திரமும் சந்தித்துக் கொண்டி ருக்கும்.
-நூல்: தேன்.மழை
வரம்பு
அலைவரம்பு மீறிவிடின்
நெய்தல்நிலப் பகுதியெலாம் அழிந்து போகும்.
கலைவரம்பு மீறிவிடின் -
சமுதாயச் சிந்தனைகள் கருகிப் போகும்.