பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 29

முக்கோணத் தமிழ்நாடு முல்லைக் காடு;

மூத்தநிலம்; இந்நாடு நெல்லின் விடு.

-இதழ். தமிழ்நாடு (14.1-1963)

- (பொங்கல்மலர்)

மாந்தரெலாம் உணவினிலே இன்பம் காண்பர் மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான் தீந்தமிழ்போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை.

திருத்தங்கள் இல்லாத நாடே இல்லை.

-இதழ். தமிழ்நாடு (14.7.1955)

வாய்க்காலின் தண்ணிரைத் தொட்டுத் துங்கும்

வயல்தனிலே ஏருழுவின் செய்தி யுண்டு. தாய்பாலில் குடும்பத்தின் கதையும், நாட்டின்

சரித்திரமும் சந்தித்துக் கொண்டி ருக்கும்.

-நூல்: தேன்.மழை

வரம்பு

அலைவரம்பு மீறிவிடின்

நெய்தல்நிலப் பகுதியெலாம் அழிந்து போகும்.

கலைவரம்பு மீறிவிடின் -

சமுதாயச் சிந்தனைகள் கருகிப் போகும்.