இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
31
நெருக்கடிகள் வரும்போதும், கொடிய துன்ப
நிகழ்ச்சிகளால் தாக்குற்றுக் கலங்கும் போதும்
சிரிப்பதற்கு முயன்றாலும் முடிவ தில்லை.
சிலர்சிரிப்பில் வஞ்சகமே நுழைவ தில்லை.
–நூல் : துறைமுகம்
மயில்தூங்க வேங்கைமரம் இடங்கொ டுக்கும்;
மதயானை தன்காலால் தினையி டிக்கும்;
வயல்நீரை வரப்பெல்லாம் அளக்கும்; நாட்டின்
வளத்தையெலாம் குறிஞ்சிநிலம் விளக்கும்.
–இதழ் ‘சுரதா’ (1–12–1969)
பகை
நெருப்பின் அழுக்கே புகையாகும்
நினைவின் அழுக்கே பகையாகும்.
சாட்சி
கண்ணும் பொருளும் கலப்பதே காட்சி!
காட்சிதான் உலகில் பொய்சொல்லச் சாட்சி!