பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சுரதாகவிதைகள்

ஊர்

உண்மையிலே, ஓர் ஊர்க்கு அழகு அவ்வூர் உல்லாசப் பூங்காவா? வீடா? அல்ல!

பாண்பாட்டில், ஒழுக்கத்தில், சிறந்த சான்றோர் சிலபேரை அவ்வூர்பெற் றிருத்தல் ஆகும்:

தமிழன்

தமிழர் உடலின் நிறமோ மாநிறம்

மாநிறம் என்பது கறுப்பின் இளமை!

- இதழ் இலக்கியம் (20.5.58)

எந்தப் பொருளையும் நன்கு ஆய்ந்து தொகுத்து, வகுத்து முறைமைப் படுத்தி, வெளியிடும் பண்பில் மிகவும் சிறந்தவர் தரணி போற்றும் தமிழர் ஆவார்:

-இதழ்: காவியம் (9-3-56)

இன்றுள்ள தமிழரெல்லாம் அந்த நாளில்

இருந்தவர்போல் தலநிமிர்ந்து வாழ வேண்டும். என்றென்றும் செந்தமிழைக் காத்தல் வேண்டும்.

ஏமாற்றும் மனப்பான்மை மறைதல் வேண்டும்.

- நூல்: தேன்.மழை