உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

33



தளர்ந்துள்ளோம்; தாழ்ந்துள்ளோம்; சங்க காலத்
தமிழ்வாழ்வை மறந்துள்ளோம்; இதனை நாட்டில்
விளங்குகின்றோம்; எழுதுகின்றோம்; பேசு கின்றோம்;
வேண்டுமென்று நம்மவனே எதிர்க்கின் றானே!

–நூல் : பட்டத்தரசி

மானத்தைக் கவரிமான் போலக் காத்து
       வருகின்ற தனிக்கூட்டம் தமிழர் கூட்டம்.
தேனற்றுப் போய்விடினும் தமிழைக் கொண்டு
       தித்திப்பு விருந்துவைப்போன் தமிழன் ஆவான்.


மொழி

“வானமுதம் எது?” என்று கேட்டான் “மேகம்
       வடிக்கின்ற ஈரமழை” என்று ரைத்தேன்.
“தேனைவிட முத்தந்தான் இனிக்கும்” என்றான்.
       “செந்தமிழ்க்கே இனிப்பதிகம்” என்று ரைத்தேன்.

–இதழ் : தமிழ்நாடு (14–4–1962)

கல்வி இல்லாதவன் செத்த மரக்கட்டை தோழா -உண்டு
கக்கிடும் சோற்றினைக் காட்டிலும் தாழ்ந்தவன் தோழி