பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சுரதாகவிதைகள்

கற்கண்டு தேனும் கசப்பாகிவிட்டது தோழ இளங் கன்னித் தமிழிசை கேட்டதின் மாறுதல் தோழி.

-இதழ் மாலைமணி (12-6-1953)

மொழிக்காக நாட்டுக்காக

முன்னோர்போல் தொண்டு செய்வோன் விழிக்கொரு விழியைப் போன்றோன்

விதைக்கொரு விதையைப் போன்றோன்.

泰 * * என்மொழி தமிழே அந்த

எழில்மொழி தேனின் தேக்கம் என்மொழி தமிழே அந்த

எழில்மொழி எனக்குத் தாய்ப்பால்

wo- நூல் : தேன்.மழை

என்மனம் என்றன் எண்ணம்

என்செயல் தமிழே என்பேன் என்குரல் என்றன் பாடல்

என்சுவை அதுவே என்பேன்

- நூல் : தேன்.மழை

சீரறிந்த நீதிகளில் நெஞ்சம் வைப்பேன் சித்திரத்தில் அன்றாடம் விழிகள் வைப்பேன் பாரறிந்த பைந்தமிழ் அழிக்க வேண்டிப் படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்.

- நூல் : தேன்.மழை