இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
சுரதா கவிதைகள்
நீதி
நெய்படும் சோற்றில், நஞ்சின்
நிழல்படு மாயின், சாவின்
கைபடும்! அதுபோல் நீதி
கறைபடின், உண்மை சாகும்!
–இதழ் : ‘சுரதா’ (15–3–68)
தூங்காத புலமை பெற்றோர்
சொல்லிடும் நீதி, என்றும்
ஏங்காம லிருக்கும்! வாழ்வில்
இளைத்துப்போ காதி ருக்கும்.
உரிமை
அந்தந்த நாட்டினைச் சொந்தக் குடிமக்கள்
ஆளுவ தன்றோ அரசுரிமை –இங்கு
வந்து இறங்கிய அந்நியர்க் கிந்திய
மண்ணில் உரிமைகள் என்ன உண்டு?