உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

39



திருவிழாக்கள்

அங்கங்கே இருப்பவரை ஒன்று சேர்க்கும்
ஆயுதந்தான் தித்திக்கும் திருவி ழாக்கள்!


பொங்கல்

தக்கவர் எழுத்தும் பேச்சும்
        தாய்மொழிப் பொங்க லாகும்
மக்களின் உழைப்பில் தோன்றும்
        மனைவிழா உணவுப் பொங்கல்.

–இதழ் : சுதேசமித்திரன்
–நூல் : தேன்மழை


ஒற்றுமை

உண்மையும் அன்பும்
ஒற்றுமை யானால்
செந்தணல் கூடச்
சந்தனமாகும்.

–‘மூடுபனி’ நாடகப்பாடல்