உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீதியே முடிவில் வெல்லும்
        நிச்சயமாய் நம்பு –நாட்டுக்
        கொற்றுமையே தெம்பு –கெட்ட
நினைவு கொண்டு தாக்கும் பகைவர்
        நெருப்பில் வீழும் கொம்பு!


மறுத்துக்கொண் டிருப்பதுவே திறமை யன்று!
        மனங்கலந்தால் குற்றங்கள் குறையும். நாடு
சிறப்புற்றுச் செழித்தோங்க வேண்டு மாயின்
        தேசீய ஒருமைப்பாட் டுணர்ச்சி வேண்டும்.


காய்ந்தமனம் கொண்டோரே சமுதா யத்தில்
        கண்டபடி வேற்றுமையை விளைவிக் கின்றார்.
சாந்தகுணம், பெருந்தன்மை குறையும் நாட்டில்
        சமுதாய ஒற்றுமையும் குறைந்து போகும்.


கூட்டுறவு

கோடை மாறினால் குளிர்ச்சி தரும்
கூட்டுறவு விருந்தால் வளர்ச்சி வரும்.