இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
சுரதா கவிதைகள்
படத்துறை இறங்கி ஏறும்
படித்துறை போன்ற தாகும்.
கதை
கதையெலாம் வார்த்தை வெடிப்புகள், கட்டுக்
கதைகளோ கற்பனை கலந்த தடிப்புகள்
✽✽✽
நாட்டில் நடை பெறும்நிகழ்ச்சி ஒவ்வொன்றும்
சிறுகதையாம்; நல்லோர் செய்த
பாட்டுநடை தேனமுதாம்! உரைநடையே
பொதுமக்கள் பசிக்குச் சோறாம்.
–நூல் : துறைமுகம்
–இதழ் : சுரதா (1–3–68)
காரணம் இன்றிக் கதைகளும், கதைகளின்
தோரணம் இன்றித் தொடர்ச்சியும் இல்லை.
கதையெல்லாம் வார்த்தை வெடிப்புகள், கட்டுக்
கதையெல்லாம் கற்பனை கலந்த தடிப்புகள்!
–இதழ் : ‘சுரதா’ (1–12–1970)
உரைநடை
நாட்டில்நடை பெறும்நிகழ்ச்சி
ஒவ்வொன்றும் சிறுகதையாம்; நல்லோர் செய்த