சுரதா கவிதைகள்
49
மதிமுயற்சி உடையோரே இலக்கி யத்தில்
மறுமலர்ச்சி உண்டாக்கிக் காட்டக் கூடும்.
–இதழ்: ‘சுரதா’ (15–5–1968)
உயத்தைப் படுக்கவைத்தால் நீட்ட மாகும்
உள்ளத்தைப் பழுக்கவைத்தால் புதுமை
தோன்றும்
துயரத்தின் உச்சியிலே கண்ணீர் தங்கும்
சொற்களுக்கு வாழ்வளித்தால் கவிதை பொங்கும்.
✽✽✽
ஒத்தமனம் கொண்டுவிட்டால் காதல் அங்கே
ஊற்றெடுக்கும்; நினைவெல்லாம் இனிக்கும். கல்விச்
சத்துடையோர் தொடுக்கின்ற பாடல் நன்கு
சாதிக்கும்! தலைமைக்கும் தலைமை தாங்கும்.
–இதழ்: ‘சுரதா’ (15–4–1968)
காவியத்தால் புலனின்பம் பெருகும்; கல்வி
கனவுவரும்; விழிவீடு வெளிச்ச மாகும்!
பாவியெத்தோன் என்றாலும், அவனைப் பற்றிப்
பாடிவிட்டால் இலக்கியத்தில் நிலைத்து நிற்பான்!
–இதழ்: ‘சுரதா’ (1–5–1968)
–(‘தமிழே என் உயிர்!’ என்னும் நூலுக்கு
வழங்கிய அணிந்துரை)