இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 49
மதிமுயற்சி உடையோரே இலக்கி யத்தில் மறுமலர்ச்சி உண்டாக்கிக் காட்டக் கூடும்.
-இதழ்: சுரதா (15.5-1968)
உயரத்தை படுக்கவைத்தால் நீட்ட மாகும்
உள்ளத்தைப் பழுக்கவைத்தால் புதுமை தோன்றும் துயரத்தின் உச்சியிலே கண்ணிர் தங்கும் சொற்களுக்கு வாழ்வளித்தால் கவிதை பொங்கும்.
ஒத்தமனம் கொண்டுவிட்டால் காதல் அங்கே
ஊற்றெடுக்கும்; நினைவெல்லாம் இனிக்கும். கல்விச்
சத்துடையோர் தொடுக்கின்ற பாடல் நன்கு சாதிக்கும்! தலைமைக்கும் தலைமை தாங்கும்.
-இதழ் : சுரதா (15.4.1968)
காவியத்தால் புலனின்பம் பெருகும்; கல்வி
கனவுவரும்; விழிவிடு வெளிச்ச மாகும்:
பாவியெத்தோன் என்றாலும், அவனைப் பற்றிப்
பாடிவிட்டால் இலக்கியத்தில் நிலைத்து நிற்பான்! -இதழ்:சுரதா (15.1968) - (தமிழே என் உயிர்' என்றும் நூலுக்கு வழங்கிய அணிந்துரை