உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

51


கவியரங்கம்

கற்போர்க்குக் கவியரங்கம் செந்தேன் கேணி
        கல்லார்க்கே கவியரங்கம் குத்தும் ஆணி.

உவமை

கவிதையில் கருத்து வேண்டும்.
        கட்டாயம் உவமை வேண்டும்.
உவமைதான் கவிதை கட்கு
        உயிர்நாடி; பெருமை சேர்க்கும்


உவமையில் லாத பாடல்
        உப்புசே ராத பண்டம்!
அவிழ்ந்திடா தாம ரைப்பூ!
        அழகுஇல் லாத மங்கை!


ஒப்பிட்டுச் சொல்வதற்கு திறமை வேண்டும்.
        உழைத்தோர்க்கே அத்திறமை வந்து வாய்க்கும்.
உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற
        உவமையில்லாப் பாடலுக்கும் பெருமை இல்லை.

–இதழ் : ‘தமிழ்நாடு’ (14–1–1965)