பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் - 51

கவியரங்கம்

கற்போர்க்குக் கவியரங்கம் செந்தேன் கேணி

கல்லார்க்கே கவியரங்கம் குத்தும் ஆணி.

இடiெஇit)

கவிதையில் கருத்து வேண்டும்,

கட்டாயம் உவமை வேண்டும். உவமைதான் கவிதை கட்கு

உயிர்நாடி, பெருமை சேர்க்கும்

磺 寧

உவமையில் லாத பாடல்

உப்புசே ராத பண்டம்! அவிழ்ந்திடா தாம ரைப்பூ!

அழகுஇல் லாத மங்கை:

ஒப்பிட்டுச் சொல்வதற்கு திறமை வேண் டும்.

உழைத்தோர்க்கே அத்திறமை வந்து வாய்க்கும். உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற

உவமையில்லாப் பாடலுக்கும் பெருமை இல்லை.

-இதழ். தமிழ்நாடு'{14-1-1965)