பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சுரதா கவிதைகள்

வாழ்வில்முன் னேற்றம் உழைக்காமல் வராது

தோழா - தானாய்

உப்புக்கடல் முத்து எப்படிக் கரையேறும் தோழி. .

-நூல் : தொடாத வாலிபம்

இழைத்தால்தான் நூல்கிடைக்கும் என்பதாலே

இழைக்கின்றோம் பஞ்சுதனை எந்த நாடும் உழைத்தால்தான் முன்னேற முடியு மன்றி

உபதேசச் தால்தேசம் உயர்வ தில்லை.

-நூல்:துறைமுகம்

இழைப்பினால் பஞ்சும்; கற்றோர் எழுத்தினால் பாட்டும்; தியின் விழிப்பினால் அடுப்பும்; மீட்டும்

வீணையால் இசையும், மண்ணின் செழிப்பினால் நெல்லும். புல்லும் சிறந்திடும் தன்மை போல, உழைப்பினால் உயரக் கூடும்.

உயர்ந்தோரை உலகம் நாடும்.

-இதழ்; சுரதா (15.5-1969)

வியர்வை

வியப்போ! புதிய உணர்ச்சியின் விளக்கம்: வியர்வையோ உடல்தரும் உப்புநீர் விளம்பரம்: