இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54 சுரதா கவிதைகள்
வாழ்வில்முன் னேற்றம் உழைக்காமல் வராது
தோழா - தானாய்
உப்புக்கடல் முத்து எப்படிக் கரையேறும் தோழி. .
-நூல் : தொடாத வாலிபம்
இழைத்தால்தான் நூல்கிடைக்கும் என்பதாலே
இழைக்கின்றோம் பஞ்சுதனை எந்த நாடும் உழைத்தால்தான் முன்னேற முடியு மன்றி
உபதேசச் தால்தேசம் உயர்வ தில்லை.
-நூல்:துறைமுகம்
இழைப்பினால் பஞ்சும்; கற்றோர் எழுத்தினால் பாட்டும்; தியின் விழிப்பினால் அடுப்பும்; மீட்டும்
வீணையால் இசையும், மண்ணின் செழிப்பினால் நெல்லும். புல்லும் சிறந்திடும் தன்மை போல, உழைப்பினால் உயரக் கூடும்.
உயர்ந்தோரை உலகம் நாடும்.
-இதழ்; சுரதா (15.5-1969)
வியர்வை
வியப்போ! புதிய உணர்ச்சியின் விளக்கம்: வியர்வையோ உடல்தரும் உப்புநீர் விளம்பரம்: