பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 55

ஊக்கம்

ஊக்கத்தை நெஞ்சில் வைத்தும்,

உழைப்பினை வாழ்வில் வைத்தும்,

துாக்கத்தை விரட்டு வோர்க்குத்

தோல்வியே வருவ தில்லை!

தகுதி

தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம் பகுதி போன்று நிலைத்து நிற்கும்

- நூல்: தேன்.மழை

குலைக்கணம் கொண்ட தென்னங்

குறும்பையைப் போன்றோர்க் கெல்லாம்

தலைக்கணம் வருமே யன்றித்

தகுதிகள் வருவ தில்லை!

-இதழ் சுரதா (15-4-1968)

卷 季

மதிநுட்பம்

கற்றோரை யார்வெல்லப் கூடு மென்றால்

கவிஞன்தான்! அரசாளும் முறையில் இங்கே