உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

55



ஊக்கம்

ஊக்கத்தை நெஞ்சில் வைத்தும்,
        உழைப்பினை வாழ்வில் வைத்தும்,
தூக்கத்தை விரட்டு வோர்க்குத்
        தோல்வியே வருவ தில்லை!


தகுதி

தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்
பகுதி போன்று நிலைத்து நிற்கும்

–நூல் : தேன்மழை

குலைக்கனம் கொண்ட தென்னங்
        குறும்பையைப் போன்றோர்க் கெல்லாம்
தலைக்கனம் வருமே யன்றித்
        தகுதிகள் வருவ தில்லை!

–இதழ் : சுரதா (15–4–1968)


மதிநுட்பம்

கற்றோரை யார்வெல்லப் கூடு மென்றால்
        கவிஞன்தான்! அரசாளும் முறையில் இங்கே