உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

57


ஒருசிலர் ஒன்றே செய்வர்
        செய்யினும் ஒழுங்காய்ச் செய்வர்

–நூல் : தேன்மழை

உண்மைகள் நன்மைக்கு வழிகாட்டும்
உயர்ந்தோர் என்பதைச் செயல்காட்டும்.


புகழ்

பொன்னும் பெண்ணும் அழகின் அவதாரம்
புகழ்தான் சிறந்த அறிவின் அலங்காரம்.
செல்வாக்கு நாலைந்து சிற்றூரைத் தாண்டும்
நல்ல புகழே நாட்டினைத் தாண்டும்


திறந்து கிடக்கும் திசைகளின் வாயிலைக்
கீறிச் செல்வது கீர்த்தியாம் சாவையும்
மீறி வாழ்வது மேலான புகழாம்.


நெருங்கியவர வேண்டுமெனில் நல்லுறவு வேண்டும்.
நீண்டுவர வேண்டுமெனில் ஓங்குபுகழ் வேண்டும்.


மிகுதியெலாம் நீரானால்; கடலாய்த் தோன்றும்;
மிச்சமெல்லாம் அறிவானால், புகழாய்த் தோன்றும்.