உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

59


பெருமையில்லாப் பாட்டெழுது மாட்டேன் என்னைப்
        பின்பற்றி எழுதுதற்கோர் கூட்ட முண்டு.
கருவடைந்த பெண்பெறுவாள் குழந்தை; என்றன்
        கருவிதைகளும் என்புகழ்க்குத் தாயாய் நிற்கும்.

–நூல் : தேன்மழை

இன்பம் என்பதும் நம்பிக்கை
துன்பம் என்பதும் நம்பிக்கை
ஆராய்ந்து பார்த்தால் பேரும்புகழும்
ஆபத்தைக் குறிக்கும் எச்சரிக்கை



வெள்ளத்தில் தோன்றியெழும் தண்ணீர் முட்டை
        விரைவினிலே அழிந்துவிடும். ஆனால் மக்கள்
உள்ளத்தில் குடியேறும் தலைவன் கீர்த்தி
        ஒருநாளும் அழிவதில்லை!....

–இதழ் : சுரதா (1–10–1969)

நெல் சேர்க்கும் வயலைப்போல்; குளிர்ச்சி கொண்ட
நிழல் சேர்க்கும் மரத்தைப்போல்; வாயின் ஓரம்
புல் சேர்க்கும் மானைப்போல் புதுமை சேர்த்துப்
புகழ்சேர்க்கத் தெரித்தோனே சிறந்தோன் ஆவான்

–இதழ் : சுரதா (15–5–1968)