இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
59
பெருமையில்லாப் பாட்டெழுது மாட்டேன் என்னைப்
பின்பற்றி எழுதுதற்கோர் கூட்ட முண்டு.
கருவடைந்த பெண்பெறுவாள் குழந்தை; என்றன்
கருவிதைகளும் என்புகழ்க்குத் தாயாய் நிற்கும்.
–நூல் : தேன்மழை
இன்பம் என்பதும் நம்பிக்கை
துன்பம் என்பதும் நம்பிக்கை
ஆராய்ந்து பார்த்தால் பேரும்புகழும்
ஆபத்தைக் குறிக்கும் எச்சரிக்கை
✽✽✽
வெள்ளத்தில் தோன்றியெழும் தண்ணீர் முட்டை
விரைவினிலே அழிந்துவிடும். ஆனால் மக்கள்
உள்ளத்தில் குடியேறும் தலைவன் கீர்த்தி
ஒருநாளும் அழிவதில்லை!....
–இதழ் : சுரதா (1–10–1969)
நெல் சேர்க்கும் வயலைப்போல்; குளிர்ச்சி கொண்ட
நிழல் சேர்க்கும் மரத்தைப்போல்; வாயின் ஓரம்
புல் சேர்க்கும் மானைப்போல் புதுமை சேர்த்துப்
புகழ்சேர்க்கத் தெரித்தோனே சிறந்தோன் ஆவான்
–இதழ் : சுரதா (15–5–1968)