பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - சுரதா கவிதைகள்

பெருமை

சிறப்பினால் மேலான செய்கையினால் அன்றிப் பிறப்பினால் யாரும் பெருமை பெறுவதில்லை

தியாகம்

உலகமெலாம் ஒட்டியுற வாட வேண்டி
உயிர்கொடுத்தார் லூதர்கிங். தியாக மென்னும்
தலைமுறையும் அலைமுறையும் அழிவ தில்லை,
தனிமனிதன் அன்புக்குத் தியாகம் எல்லை!

தேருக்குள் அச்சாணி வையந் தன்னை
திருத்துதற்கோர் கருணைமகன்! அவன்தான்

தியாகி!

- (13-1967-ல் சென்னை வானொலியில் தியாகம்'
என்ற தலைப்பில் பாடியது)

தந்தையும் தாயும் தருவது தேகம்.
 தரணியில் சாவே முடிவுரை பாகும்.
தன்னலம் வேண்டிச் செய்வதே யோகம்
தன்சுகம் யாவையும் இழப்பதே தியாகம்