இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78 சுரதா கவிதைகள்
ஒட்டாமல் உறவில்லை, கலப்பு இன்றி
உலகத்தில் தனிப்பொருளால் எதுவு மில்லை: வெட்டாமல் குளம்வருமா? அரும்பின் கூட்டம்
விரியாமல் இருந்துவிடில் மணந்தான் ஏது.
-இதழ்: இலட்சியவாதி(1-7-1958)
காதலிலே ஈடுபட்டால், நாட்டு மக்கள்
கலப்புமணம் செய்துகொள்ள ஒப்புக்
கொண்டால் சாதிகளே வேரற்று வீழ்ந்து போகும்
சாத்திரமும் கோத்திரமும் கண்ணை மூடும்
கலப்பு மணம் நெய்தல்நிலம் போன்ற தாகும்;
மலர்ச்சிதரும் சீர்திருத்த மணமோ, செந்நெல்
வயல்சார்ந்த மருதநிலம் போன்ற தாகும்.
தாலி
நான்ரி தனித்தனி, நங்கையே இன்று தான் நீ எனக்கு நீ, தையல் உனக்குதான்; நான்தான் நீ-இனி நான்தான் நீ.யெனும் தத்துவ விளக்கமே தங்கத் தாலியாம்.
- துரல்: சுவரும் சுண்ணாம்பும்