பக்கம்:சுலபா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சுலபா

'சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை! தன்ணிரில் தூக்கிப் போட்டபின் இப்படித்தான் நீந்தணும்னு மீன் குஞ்சுக்கு யாரும் சொல்லித்தர மாட்டார்கள் சுலபா.'

"பாதிக் கிணறு தாண்டின மாதிரி ஏற்பாடு பண்ணிவிட்டு வந்திருக்கிருய்?'

“ரொம்ப டெலிகேட்டான விஷயம் இது! என்னைப்போல ஒரு பெண் உன்னைப் போல ஒரு பெண்ணுக்கு இது வரைதான் ஏற்பாடு பண்ண முடியும் இந்த விஷயத்தில். என் கணவர் எத்தனையோ வியாபார நண்பர்களுக்கு ஹோட்டல்-ஹோஸ் டிஸ்-எல்லாம் ஃபோனிலேயே ஏற்பாடு பண்ணிப் பேசறப்போ நானே கேட்டிருக்கேன். அது ஈஸி.வசதியுள்ள ஆண்களுக்கு உபசரணைப் பெண்கள் அரேஞ்ஜ் பண்றது சுலபம். வசதியுள்ள உன்போன்ற ஒரு பெண்ணுக்கு நீ சொல்கிற வர்ணனைகளுக்கு உட்பட்ட ஓர் ஆண்மகனை ஏற்பாடு செய்யிறதுங்கிறது முடியாத காரியம். விபரீதமான முயற்சியும்கூட. அதல்ை என்னமோ சொல்லி எப்படியோ பேசி உள்ளே நுழைந்து அந்தத் திவ்ய சேவாசிரமத்துக்கு ஐயாயிரம் ரூபாய் டொனேஷன்வேறு தந்து நான் என் மேல் நம்பிக்கை வரச் செய்ய வேண்டியிருந்ததடி சுலபா என் மேலும் நான் சொன்ன ஏற்பாட்டின் மேலும் சந்தேகமே ஏற்படாமல் பெருந்தன்மையாக அந்தத் திவ்யா னந்தர் ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். வெறும் படித் தில் சிரிக்கிற சிரிப்பு ஆடுகிற ஆட்டம், தோன்றுகிற தோற்றத் தின் மூலமே பல லட்சம் மக்களை மயங்க அடித்துப் பைத்தியமாக்கியிருக்கிற நீ பென் வாடையே படாமல் வறண்டு - காய்ந்து போயிருக்கிற ஒரு சாமியாரை வசப்படுத்துகிற வேலை கூட மீதமில்லாமல் நீ அங்கே போன வுடன் தயாராகச் சொம்பிலிருந்து தண்ணிர் படுகிற மாதிரி, முடியணும்னு நெனச்சா நான் ஒண்ணுமே பண்ண முடி யாதுடி!" .. - -

"நீயே இப்படித் தயங்கிளுல் நான் என்னடி ്വങ്ങജൂബേക கோகிலா!' “... - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/112&oldid=565780" இலிருந்து மீள்விக்கப்பட்டது