பக்கம்:சுலபா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 149

வேறு சிலர் இடுப்பில் கைலியும் பணியனுமாகப் பரிமாறினர். தலையைச் சொறிந்தனர். மூக்கு நோண்டினர். உண்ணும் பிளேட்டுகளில் பண்டங்களை "ணங்'கென்று ஒசையெழ வைத்தனர். கொண்டு வந்து வைக்கிற வேகத்தில் தண்ணீர், காப்பி எல்லாம் கஸ்டமருடைய வேட்டி சட்டையில் தெறித்து விடும்போலிருந்தது சில சமயங்களில்,

விலை அதிகமான இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை காப்பி ஐஸ்க்ரீம் இத்தனையும் சாப்பிட்ட ஒரு கஸ்டமரின் பில் ஒன்றரை ரூபாய் என்று அவருக்குப் பரிமாறிய சர்வர் குரல் கொடுத்தான். போகிற போக்கில் அந்தக் கஸ்டமர் டிப்ஸ் போல் சர்வரிடம் ஒரு முழு ஒரு ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டுப் போவதைக் குப்தா கவனித்தான். விலை விவரங்களை விசாரித்து அந்தக் கஸ்டமர் சாப்பிட்டதற்கு உண்மையில் என்ன பில் ஆகுமென்று பார்த்தால் கிட்டத்தட்ட ஆறு ரூபாய்க்கு மேல் ஆயிற்று. சர்வருக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுத்ததால் மொத்தம் ரெண்டரை ருபாயில் அந்தக் கஸ்டமர் சகலத்தையும் முடித்துக் கொள்ள முடிந்தது.

ஒட்டல் பார்கவி ஸ்டோர் கீப்பர்-சரக்கு மாஸ்டரிடம் சாமான்கள் கொடுக்கும்போது ஒருநாள் கவனித்துக் குறித்துக் கொண்டான் குப்தா. பாதாம் கீருக்காக ஓர் எடையளவு பாதாம் பருப்புத் தரப்பட்டது. பகலில் தன் அறையிலிருந்து குப்தாவே ஒரு பாதாம்கீர் வரவழைத்துச் சாப்பிட்ட போது நிலக்கடலைப் பருப்பை அரைத்துக் கேலரிப் பவுடரால் நிறமூட்டப்பட்டுக் கூளிரப் பண்ணிய கீராக இருந்தது அது. ஸ்டோர் கீப்பரும் உடந்தை என்று புரிந்தது.

அங்கே சரக்கு மாஸ்டருக்கு என்ன சம்பளம் என்று விசாரித்ததில் மிகவும் குறைவாக இருந்தது. ஆடிட்டருடன் குப்தா மெல்ல மெல்லத் துப்பறிந்ததில் எந்த மளிகைக் கடிை பார்கவி'க்கு மளிகைச் சாமல்கள் சப்ளை செய்ததோ அதே கடைக்குப் பாதாம் பருப்பு திரும்பிப் போவது தெரிந்தது.

சு-10 x * x .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/151&oldid=565819" இலிருந்து மீள்விக்கப்பட்டது