பக்கம்:சுலபா.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

för. Eir. 218

யிருந்து நேரே டில்லி போயிட்டு அப்புறம் இங்கே வர்றேன்னி ருக்கார்,” என்ருன் தண்டபாணி. -

ஏற்கெனவே இருந்த அறைகள், இப்போதுள்ள ஏ. சி. சூட்கள் ஆகியவற்றிற்கே ஆள் வருமா என்று முதலில் பயந்தது போகப் பக்கத்திலேயே "நியூ பார்கவி-அனெக்ஸ்’னு இன்ைெரு மூணு மாடி கட்டிலுைம் ஃபுல் ஆகும் போலிருந்தது. ஹாலிடே, ஓய்வு, பில்கிரிமேஜ், சினிமாத் தயாரிப்பு, பார்கவி யின் ரெஸ்டாரெண்டில் பெண்களே பரிமாறும் அழகு, எல்லா மாகச் சேர்ந்து குருபுரத்தையே கேந்திரமாக்கி இருந்தன.

அந்த நாளில் பழைய கிராமாந்தரத்துக் கல்யாணங் களுக்குக் கிணற்றடியில் கொல்லைப் பக்கம் நீளமாகக் குழி தோண்டிக் கோட்டை அடுப்பு என்று டன் டன்னுக விறகுக் கட்டையைப் போட்டு எரித்துச் சமையல் பண்ணுணர்களே அது போல், கோட்டையடுப்பும் விறகு போட்டு எரிக்கும் முறையும்தான் பழைய பார்கவியில் இருந்தன. அதனல் சமையலறை புகை மயமாகக் கரிபடிந்து இருண்டிருக்கும். ரூம்களில்கூடச் சமையல்கட்டுப் புகை அடித்து மூச்சுத் தினறும். இதனுல் கட்டிய முதல் வருடக் கடைசிக்குள்ளேயே பாதிக் கட்டிடங்கள் மங்கிக் கறுத்திருந்தது. கெட்டுப் போயிருந்தது. - - -

இவர்கள் நியூ பார்கவி'யாக மாற்றிய போது அந்தக் கோட்டை அடுப்புக்களை இடித்துவிட்டு காஸ் அடுப்பு வரிசை களை உருவாக்கியதால் கட்டிடம் பிழைத்தது. குருபுரத்தில் காட்டு விறகும் கரியும் கொஞ்சம் மலிவு என்பதால் சிவவடி வேலுவும் காதில் பூச்சுற்றிக் கொண்டி கரும்பாயிரமும் கோட்டையடுப்பைக் கட்டியிருந்தார்கள்.

இப்படிச் சிவவடிவேலுவை வெளிநாடு அனுப்பிவிட்டுக் கரும்பாயிரம் வகையருக்களே வெளியே அனுப்பிவிட்டு இந்த மாறுதல்களை வேகமாகச் செய்ய முடிந்ததுபோல் அவர்களை வைத்துக்கொண்டு வேகமாகச் செய்ய முடியாது என்பதை

尋-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/215&oldid=565883" இலிருந்து மீள்விக்கப்பட்டது