பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

25


துணி மடித்த கையுடன் ரத்னா அப்போது உள்ளே வருகிறாள்.

“பாட்டி! என்ன? எப்படியிருக்கிறீங்க? நான் உங்க பேத்தி ரத்னா...!”

பாட்டி அவளை ஏற இறங்கப் பார்த்துத் தலைத்துணியை ஒர் அசைப்புடன் இறங்கிக் கொள்கிறாள்.

“அதான் வந்து எட்டு மணி நேரம் கழிச்சுக் குசலம் விசாரிக்கிறியாக்கும்? எங்க வந்தே இப்ப?”

“இங்கே இருக்க வந்திருக்கிறேன். ஏன், வரககூடாதா பாட்டி?”

பேஷா இருக்கு. உன் சித்தி இருக்கா, ஈஷிண்டு எல்லாம் செய்வா. என்னை எதுக்குக் கேக்கற? என் வீடா இது? நான் ஒரு மூலைல யாரு வம்பும் வேண்டாம்னு தான் ஒதுங் கிட்டேனே?”

“ஐயய்யோ? நீங்க ஏன் பாட்டி ஒதுங்கணும்? ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறிங்க... ஒதுங்குவானேன்...”

“கேட்டியாடி ரோஜா அக்கிரமத்தை? நான் ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறேனாம்? ஏண்டியம்மா? உங்கம்மா சொல்லிக் கேக்கச் சொன்னாளா? எந்தனை நாள் என் அதிகாரத்தில் இருந்தா?”

“எங்கம்மாவ நான் சொல்லல...

அவள் அடுத்து பேசு முன், கிரி அஞ்சிக் கொண்டு அங்கிருந்து அகலுகிறாள்.

பாவம்! சித்திக்கு உங்களைக் கண்டு எத்தனை பயம் பாருங்க!”