பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சுழலில் மிதக்கும் தீபங்கள்


மேலெழுந்த வாரியாகப் பிரித்துப் பார்க்கிறாள்.

பெயர், வயசு, படிப்பு தகுதிகள்...பிறந்த இடம், வகுப்பு... குடும்பநிலை பற்றிய கணிப்பு, கூட்டுக் குடும்பமாதனிக் குடும்பமா-அது பற்றிய கருத்துக்கள், இவள் திருமணத்தில் வரதட்சணை உண்டா, சுயச் சார்பு விவரம்-ஆண்-பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறை பற்றிய விவரம், இவள் கருத்து, கற்புநிலை பற்றிய கருத்து, பெண்ணின் பொதுவாழ்வைப் பாதிக்கிறது என்பதில் அநுபவம், குடும்பத் தில் ஆணும் பெண்ணும் சமஉரிமை பெறுவது என்பது செயல் ரீதியாகச் சாத்தியமா-ஆணின் இயக்கம் குடும்பத்தில் எந்த விதமாக இருந்தால் சமஉரிமை பெறலாம் என்று கருதுகிறாள். இப்படி, பலபல வினாக்கள்.

அபு விடை பெற்றுக் கொண்டு போகிறான். ரத்னா அவனுடன் தெருமுனை வரையிலும் செல்கிறாள். கரி அந்தத் தாளைப் பத்திரமாகச் சுவாமி அலமாரியின் பக்கம் பெட்டிக்கடியில் வைத்துவிட்டு, குளியலறைக்குள் செல்கிறாள்.

ரத்னா உள்ளே நுழைகையில், கிரி, ஈரச்சேலையைப் பிழிந்து உலர்த்துகிறாள்.

“கேட்டது இராமாயணம். இடிப்பது பெருமாள் கோயிலா? என்ன அக்கிரமம் இது. கிரி ஆன்டி?”

அவளைப் பார்க்காமலே கிரி பதிலளிக்கிறாள்.

“ரத்னா கூட்டை உடைச்சிட்டா, பிறகு அதில் இருப் பதில் அர்த்தமில்லை. அதனால், உடனே செயலாக்க முடியாது...எதையும்.”

ஆம். கிரி ஒரு முடிவுக்கு வருவதென்பது எளிதல்ல. வந்தால், பின் வாங்கல், விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது...