பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

சுழலில் மிதக்கும் தீபங்கள்


அவனும் புரியாதவனாக, “எது...?” என்று கேட்கிறான்.

பெட்டியை வெளியிலெடுத்துக் காட்டுகிறாள்.

“ஒ இதுவா? ரோஜா மாமி குடுத்து வச்சிருக்கச் சொன்னாளாம். ஸ்டேட்ஸ் போறாளோ என்னமோ? விவேக்குக்குக் கல்யாணம் நிச்சயமாகும் போல...”

‘இதென்ன புதிசா இருக்கு? ரோஜா மாமிக்கு அவங்க வீட்டில இல்லாத பந்தோபஸ்தா இங்க? பாங்க் லாக்கர் எங்க போச்சு? தாகூர் அவின்யூல கோட்டையாக வீடு...ஸெக்யூரிட்டி ரொம்ப நாளா இருக்கும் சமையல் சாம்பசிவம்...இவர்களை மீறி என்றுமில்லாமல் இதென்ன புதிசு? அப்படி என்ன விலை மதிப்புள்ள சாமான்? நகையா..?’

-நாவில் இவ்வளவு சொற்களும் வரவில்லை.

“இது என்னவாம்? நகையா?”

அவன் உடனே எரிந்து விழுகிறான். இத பாரு, தொண தொணங்காதே. எனக்கு நேரமாச்சு. என்ன வச்சிருக்கே? சப்பாத்தியா, ரைஸா?”

“ஏணிப்படி எரிஞ்சு விழனும்? சப்பாத்தி, ரைஸ், சமயலறை மட்டும்தான் எனக்கு. அதிகப்படி ஒண்னும் கேட்கக் கூடாது! உங்கம்மா எது செஞ்சாலும் அது சரி. நான் ஏன் என்னன்னு கேட்டா, கோபம் வந்துடும்!”

“முனு முணுத்துக் கொண்டு அகலுகிறாள். தாழ்மைப் படுத்தும் இந்த நடப்பு அவளை ஆயிரம் நெருஞ்சி முட்களாக மாறிப் பிடுங்குகின்றன.

தட்டில் சோற்றைப் போட்டு மேசையில் வைக்கிறாள். குளிர் நீரை எடுத்து வைக்கிறாள். மேசையில் டக்கென்று உறைக்கிறது.

“ஏய், கிரி...என்ன?... என்ன முணுமுணுக்கிற?...”

அவள் பேசவில்லை.