பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வற்றாத மேகம் வாயைத் திறந்தால் ஊசிபோல் மின்னல் உடனே தோன்றும்.

விம்மி விம்மி மேகங்கள் அழுதால்

நல்ல மழைநீர் நமக்கெலாம் கிடைக்கும்.

வான்மழை, உலகினை வாழ வைப்பதால்

அம்மழை புவிக்கே அமுத மாகும்.

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர்மழை, புருடனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை, வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை, வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே